பகுதி - 874
உனது திருவடிகளை..
‘உனது திருவடிகளை அடையவேண்டும்’ என்று கோருகின்ற இப்பாடல் திருவண்ணாமலைக்குரியது.
அடிக்கு ஒற்றொழித்து 32 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடில், மூனறு குறில், இரண்டு (கணக்கில் சேராத) மெல்லொற்றுகள் என நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.
தனதன தாந்ததந்த தனதன தாந்ததந்த
Advertisement
தனதன தாந்ததந்த தனதான
இருவினை யூண்பசும்பை கருவிளை கூன்குடம்பை
யிடரடை பாழ்ம்பொதும்ப கிதவாரி
இடைதிரி சோங்குகந்த மதுவது தேங்குகும்ப
மிரவிடை து|ங்குகின்ற பிணநோவுக்
குருவியல் பாண்டமஞ்சு மருவிய கூண்டுநெஞ்சொ
டுயிர்குடி போங்குரம்பை யழியாதென்
றுலகுட னேன்று கொண்ட கருமபி ராந்தொழிந்து
னுபயப தாம்புயங்க ளடைவேனோ
அருணையி லோங்குதுங்க சிகரக ராம்புயங்க
ளமரர் குழாங்குவிந்து தொழவாழும்
அடியவர் பாங்கபண்டு புகலகி லாண்டமுண்ட
அபிநவ சார்ங்ககண்டன் மருகோனே
கருணைம்ரு கேந்த்ரஅன்ப ருடனுர கேந்த்ரர்கண்ட
கடவுள்ந டேந்த்ரர்மைந்த வரைசாடுங்
கலபக கேந்த்ரதந்த்ர அரசநி சேந்த்ரகந்த
கரகுலி சேந்த்ரர்தங்கள் பெருமாளே.