முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 874

உனது திருவடிகளை..

Updated On : 21 ஜூலை, 2018 at 5:46 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:47 PM

‘உனது திருவடிகளை அடையவேண்டும்’ என்று கோருகின்ற இப்பாடல் திருவண்ணாமலைக்குரியது. 

அடிக்கு ஒற்றொழித்து 32 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடில், மூனறு குறில், இரண்டு (கணக்கில் சேராத) மெல்லொற்றுகள் என நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனதன தாந்ததந்த தனதன தாந்ததந்த

Advertisement

      தனதன தாந்ததந்த                  தனதான

இருவினை யூண்பசும்பை கருவிளை கூன்குடம்பை

         யிடரடை பாழ்ம்பொதும்ப         கிதவாரி

      இடைதிரி சோங்குகந்த மதுவது தேங்குகும்ப

         மிரவிடை து|ங்குகின்ற           பிணநோவுக்

குருவியல் பாண்டமஞ்சு மருவிய கூண்டுநெஞ்சொ

         டுயிர்குடி போங்குரம்பை          யழியாதென்

      றுலகுட னேன்று கொண்ட கருமபி ராந்தொழிந்து

         னுபயப தாம்புயங்க               ளடைவேனோ

அருணையி லோங்குதுங்க சிகரக ராம்புயங்க

      ளமரர் குழாங்குவிந்து               தொழவாழும்

      அடியவர் பாங்கபண்டு புகலகி லாண்டமுண்ட

         அபிநவ சார்ங்ககண்டன்          மருகோனே

கருணைம்ரு கேந்த்ரஅன்ப ருடனுர கேந்த்ரர்கண்ட

         கடவுள்ந டேந்த்ரர்மைந்த         வரைசாடுங்

      கலபக கேந்த்ரதந்த்ர அரசநி சேந்த்ரகந்த

         கரகுலி சேந்த்ரர்தங்கள்           பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.