முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 844

ஞன நெறியைப் பெறவேண்டும்

Updated On : 7 ஜூன், 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:43 PM

‘ஞன நெறியைப் பெறவேண்டும்’ என்று கோருகின்ற இப்பாடல், பொதுப் பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் இரண்டு நெடிலும் ஒரு குறிலுமாக மூன்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் நான்கு குறில் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என்று நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.

தானனா தத்ததன தானனா தத்ததன

Advertisement

                தானனா தத்ததன          தனதான

வேலைவா ளைக்கொடிய ஆலகா லத்தைமதன்

                        வீசுபா ணத்தைநிக                                          ரெனலாகும்

      வேதைசா தித்தவிழி மாதரா பத்தில்விளை

                        யாடிமோ கித்திரியும்                                    வெகுரூப

கோலகா லத்தைவிட லாகிமா றக்குணவி

                        காரமோ டத்தெளிய                                       அரிதான

      கூறொணா தற்பரம ஞானரூ பத்தின்வழி

                        கூடலா கப்பெருமை                                      தருவாயே

வாலிமார் பைத்துணிய ஏழ்மரா இற்றுவிழ

                        வாளியோ டக்கருது                                       மநுராமன்

      வானுலோ கத்திலம ரேசனோ லிக்கவளை

                        யூதிமோ கித்துவிழ                                        அருள்கூரும்

நீலமே னிக்குமரு காவுதா ரத்துவரு

                        நீசர்வாழ் வைக்களையு                               மிளையோனே

      நேசமா கக்குறவர் தோகைமா னைப்புணரு

                        நீபதோ ளொப்பரிய                                          பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.