முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 848

நற்கதி பெறுவநற்கதி பெறுவதைக்..

Updated On : 9 ஜூன், 2018 at 3:58 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:46 PM

நற்கதி பெறுவதைக் கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 20 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; இரண்டு, ஐந்து ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; மூன்றும் ஆறுமான சீர்கள் தொங்கல் சீர்களாகவும் அமைந்துள்ளன.

தனதத்த தத்த   தனதான

Advertisement

      தனதத்த தத்த   தனதான

மனைமக்கள் சுற்ற                                                                 மெனுமாயா

                வலையைக்க டக்க                                                 அறியாதே

வினையிற்செ ருக்கி                                                              யடிநாயேன்

                விழலுக்கி றைந்து                                                   விடலாமோ

சுனையைக்க லக்கி                                                                விளையாடு

                சொருபக்கு றத்தி                                                      மணவாளா

தினநற்ச ரித்ர                                                                              முளதேவர்

                சிறைவெட்டி விட்ட                                               பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.