முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 852

என் ஆவி மயக்கமடையாமல்

Updated On : 14 ஜூன், 2018 at 10:54 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 7:06 PM

‘என் ஆவி மயக்கமடையாமல் காத்தருள வேண்டும்’ என்று நாயகி பாவத்தில் கோரும் இப்பாடல் பொதுப் பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 20 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, நான்கு ஆகிய சீர்களில் இரண்டு நெடிலும் ஒரு குறிலுமாக மூன்றெழுத்துகளும்; இரண்டு, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலுமாக மூன்றெழுத்துகளும்; தொங்கல் சீர்களான நான்காம், ஆறாம் சீர்களில் இரண்டு குறிலும், இரண்டு நெடிலும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றுமாக நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.

தானான தானன                                                                       தந்ததானா

Advertisement

      தானான தானன                                                       தந்ததானா

வாரிமீ தேயெழு                                                                        திங்களாலே

                மாரவே ளேவிய                                                       அம்பினாலே

பாரெலா மேசிய                                                                        பண்பினாலே

                பாவியே னாவிம                                                      யங்கலாமோ

சூரனீள் மார்புதொ                                                                    ளைந்தவேலா

                சோதியே தோகைய                                               மர்ந்தகோவே

மூரிமால் யானைம                                                                ணந்தமார்பா

                மூவர்தே வாதிகள்                                                  தம்பிரானே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.