முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 862

பொதுப் பெண்டிரின் மயக்கம்..

Updated On : 24 ஜூன், 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:32 PM

‘பொதுப் பெண்டிரின் மயக்கம் அறவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் வீரை நகருக்கு உரியது.  வீரை நகர் என்பது திருப்பெருந்துறைக்கு மேற்கே உள்ள ஒரு சிவத்தலம்.  இப்பாடல் பழநித் திருப்புகழ்ப் பாடல்களின் வரிசையில் வருகிறது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் இரண்டு நெட்டெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தானா தனதன தானா தனதன

Advertisement

                தானா தனதன                                                            தனதான

ஆதா ளிகள்புரி கோலா கலவிழி

                        யாலே யமுதெனு                                            மொழியாலே

                ஆழ்சீ ரிளநகை யாலே துடியிடை

                        யாலே மணமலி                                               குழலாலே

சூதா ரிளமுலை யாலே யழகிய

                        தோடா ரிரு குழை                                            யதனாலே

                சோரா மயல்தரு மானா ருறவிடர்

                        சூழா வகையருள்                                             புரிவாயே

போதா ரிருகழல் சூழா ததுதொழில்

                        பூணா தெதிருற                                                  மதியாதே

                போரா டியஅதி சூரா பொறுபொறு

                        போகா தெனஅடு                                              திறலோனே

வேதா வுடனொடு மாலா னவனறி

                        யாதா ரருளிய                                                     குமரேசா

                வீரா புரிவரு கோவே பழநியுள்

                        வேலா இமையவர்                                         பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.