பகுதி - 864
எப்போதும் உனது..
‘எப்போதும் உனது அடியார் திருக்கூட்டத்துடன் சேர்ந்திருக்க வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் சிதம்பரத்துக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 37 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்கள் ஒரு நெடில், ஒரு குறில் என இரண்டெழுத்துகளையும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்களும் நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்களும் ஒரு நெடில் இரண்டு குறில் என மூன்றெழுத்துகளையும்; மூன்று, ஏழு, பதினொன்று ஆகிய சீர்கள் இரண்டு குறில் ஒரு நெடில் என மூன்றெழுத்துகளையும் கொண்டு அமைந்திருக்கின்றன.
தான தானன தனனா தானன
Advertisement
தான தானன தனனா தானன
தான தானன தனனா தானன தனதான
தாது மாமலர் முடியா லேபத
றாத நூபுர அடியா லேகர
தாள மாகிய நொடியா லேமடி பிடியாலே
சாடை பேசிய வகையா லேமிகு
வாடை பூசிய நகையா லேபல
தாறு மாறுசொல் மிகையா லேயன நடையாலே
மோதி மீறிய முலையா லேமுலை
மீதி லேறிய கலையா லேவெகு
மோடி நாணய விலையா லேமயல் தருமானார்
மோக வாரிதி தனிலே நாடொறு
மூழ்கு வேனுன தடியா ராகிய
மோன ஞானிக ளுடனே சேரவு மருள்வாயே
காத லாயருள் புரிவாய் நான்மறை
மூல மேயென வுடனே மாகரி
காண நேர்வரு திருமால் நாரணன் மருகோனே
காதல் மாதவர் வலமே சூழ்சபை
நாத னார்தம திடமே வாழ்சிவ
காம நாயகி தருபா லாபுலி சையில்வாழ்வே
வேத நூன்முறை வழுவா மேதினம்
வேள்வி யாலெழில் புனைமூ வாயிர
மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே
வீறு சேர்வரை யரசாய் மேவிய
மேரு மால்வரை யெனநீள் கோபுர
மேலை வாயிலின் மயில்மீ தேறிய பெருமாளே.