பகுதி - 866
அன்பர் திருக் கூட்டத்தோடு..
‘அன்பர் திருக்கூட்டத்தோடு சேர்ந்திருக்கின்ற பேற்றை அருளி நற்கதியைத் தரவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் மதுரைக்கானது.
வழக்கத்தைவிட நீளமான தொங்கல் சீரை உடைய இந்தப் பாடலில் ஓரடிக்கு ஒற்றொழித்து 50 எழுத்துகள் உள்ளன. ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக மூன்றெழுத்துகளும்; மூன்று, நான்கு—ஏழு, எட்டு—பதினொன்று, பன்னிரண்டு ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; தொங்கல் சீரின் முன்பாதியில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; பின்பாதியில் வழக்கம்போல மூன்று குறிலும் ஒரு நெடிலுமாக அமைந்துள்ளன.
தனத்த தாத்தன தனதன தனதன
Advertisement
தனத்த தாத்தன தனதன தனதன
தனத்த தாத்தன தனதன தனதன தனதனத் தனதான
பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை
ஒருத்தர் வாய்ச்சுரு ளொருவர்கை யுதவுவர்
பணத்தை நோக்குவர் பிணமது தழுவுவர் அளவளப் பதனாலே
படுக்கை வீட்டினு ளவுஷத முதவுவர்
அணைப்பர் கார்த்திகை வருதென வுறுபொருள்
பறிப்பர் மாத்தையி லொருவிசை வருகென அவரவர்க் குறவாயே
அழைப்ப ராஸ்திகள் கருதுவ ரொருவரை
முடுக்கி யோட்டுவ ரழிகுடி யரிவையர்
அலட்டி னாற்பிணை யெருதென மயலெனு நரகினிற் சுழல்வேனோ
அவத்த மாய்ச்சில படிகுழி தனில்விழும்
விபத்தை நீக்கியு னடியவ ருடனெனை
அமர்த்தி யாட்கொள மனதினி லருள்செய்து கதிதனைத் தருவாயே
தழைத்த சாத்திர மறைபொரு ளறிவுள
குருக்கள் போற்சிவ நெறிதனை யடைவொடு
தகப்ப னார்க்கொரு செவிதனி லுறைசெய்த முருகவித் தகவேளே
சமத்தி னாற்புகழ் சனகியை நலிவுசெய்
திருட்டு ராக்கத னுடலது துணிசெய்து
சயத்த யோத்தியில் வருபவ னரி திருமருகப் பரிவோனே
செழித்த வேற்றனை யசுரர்க ளுடலது
பிளக்க வோச்சிய பிறகம ரர்கள்பதி
செலுத்தி யீட்டிய சுரபதி மகள்தனை மணமதுற் றிடுவோனே
திறத்தி னாற்பல சமணரை யெதிரெதிர்
கழுக்க ளேற்றிய புதுமையை யினிதொடு
திருத்த மாய்ப்புகழ் மதுரையி லுறைதரும் அறுமுகப் பெருமாளே.