முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 866

அன்பர் திருக் கூட்டத்தோடு..

Updated On : 28 ஜூன், 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:34 PM

‘அன்பர் திருக்கூட்டத்தோடு சேர்ந்திருக்கின்ற பேற்றை அருளி நற்கதியைத் தரவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் மதுரைக்கானது.

வழக்கத்தைவிட நீளமான தொங்கல் சீரை உடைய இந்தப் பாடலில் ஓரடிக்கு ஒற்றொழித்து 50 எழுத்துகள் உள்ளன.  ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக மூன்றெழுத்துகளும்; மூன்று, நான்கு—ஏழு, எட்டு—பதினொன்று, பன்னிரண்டு ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; தொங்கல் சீரின் முன்பாதியில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; பின்பாதியில் வழக்கம்போல மூன்று குறிலும் ஒரு நெடிலுமாக அமைந்துள்ளன.

தனத்த தாத்தன தனதன தனதன

Advertisement

                தனத்த தாத்தன தனதன தனதன

                தனத்த தாத்தன தனதன தனதன                                தனதனத் தனதான

பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை

                        ஒருத்தர் வாய்ச்சுரு ளொருவர்கை யுதவுவர்

                        பணத்தை நோக்குவர் பிணமது தழுவுவர்             அளவளப்  பதனாலே

      படுக்கை வீட்டினு ளவுஷத முதவுவர்

                        அணைப்பர் கார்த்திகை வருதென வுறுபொருள்

                        பறிப்பர் மாத்தையி லொருவிசை வருகென     அவரவர்க் குறவாயே

அழைப்ப ராஸ்திகள் கருதுவ ரொருவரை

                        முடுக்கி யோட்டுவ ரழிகுடி யரிவையர்

         அலட்டி னாற்பிணை யெருதென மயலெனு     நரகினிற் சுழல்வேனோ

      அவத்த மாய்ச்சில படிகுழி தனில்விழும்

                        விபத்தை நீக்கியு னடியவ ருடனெனை

         அமர்த்தி யாட்கொள மனதினி லருள்செய்து             கதிதனைத் தருவாயே

தழைத்த சாத்திர மறைபொரு ளறிவுள

                        குருக்கள் போற்சிவ நெறிதனை யடைவொடு

         தகப்ப னார்க்கொரு செவிதனி லுறைசெய்த               முருகவித் தகவேளே

      சமத்தி னாற்புகழ் சனகியை நலிவுசெய்

                        திருட்டு ராக்கத னுடலது துணிசெய்து

                        சயத்த யோத்தியில் வருபவ னரி               திருமருகப் பரிவோனே

செழித்த வேற்றனை யசுரர்க ளுடலது

                        பிளக்க வோச்சிய பிறகம ரர்கள்பதி

            செலுத்தி யீட்டிய சுரபதி மகள்தனை                          மணமதுற் றிடுவோனே

      திறத்தி னாற்பல சமணரை யெதிரெதிர்

                        கழுக்க ளேற்றிய புதுமையை யினிதொடு

             திருத்த மாய்ப்புகழ் மதுரையி லுறைதரும்                அறுமுகப் பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.