முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 868

உனது திருவடிகளைத்..

Updated On : 30 ஜூன், 2018 at 10:58 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:35 PM

‘உனது திருவடிகளைத் தந்து ஆண்டுகொள்ள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவேங்கடத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 37 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் நான்கு குறில், ஒரு நெடில், ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்று என ஐந்தெழுத்துகளும்; இரண்டு-மூன்று, நான்கு-ஐந்து, எட்டு-ஒன்பது ஆகிய சீர்களில் ஒரு நெடில், இரண்டு குறில் என மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனதாந்தன தானன தானன

Advertisement

      தனதாந்தன தானன தானன

      தனதாந்தன தானன தானன               தனதான

வரிசேர்ந்திடு சேல்கய லோவெனு

         முழைவார்ந்திடு வேலையு நீலமும்

         வடுவாங்கிடு வாள்விழி மாதர்கள்      வலையாலே

      வளர்கோங்கிள மாமுகை யாகிய

         தனவாஞ்சையி லேமுக மாயையில்

         வளமாந்தளிர் போல்நிற மாகிய         வடிவாலே

இருள்போன்றிடு வார்குழல் நீழலில்

         மயல்சேர்ந்திடு பாயலின் மீதுற

         இனிதாங்கனி வாயமு தூறல்கள்        பருகாமே

      எனதாந்தன தானவை போயற

         மலமாங்கடு மோகவி காரமு

         மிவைநீங்கிட வேயிரு தாளினை        யருள்வாயே

கரிவாம்பரி தேர்திரள் சேனையு

         முடனாந்துரி யோதன னாதிகள்

         களமாண்டிட வேயொரு பாரத          மதிலேகிக்

      கனபாண்டவர் தேர்தனி லேயெழு

         பரிதூண்டிய சாரதி யாகிய

         கதிரோங்கிய நேமிய னாமரி            ரகுராமன்

திரைநீண்டிரை வாரியும் வாலியும்

         நெடிதோங்கும ராமர மேழொடு

         தெசமாஞ்சிர ராவண னார்முடி         பொடியாகச்

      சிலைவாங்கிய நாரண னார்மரு

         மகனாங்குக னேபொழில் சூழ்தரு

         திருவேங்கட மாமலை மேவிய         பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.