முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 772

அடிக்கு ஒற்றொழித்து

Updated On : 1 மார்ச், 2018 at 1:03 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:52 PM

‘உன்னுடைய கழலைத் தொழும் இயல்பைத் தந்தருளவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவண்ணா மலைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களின் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும் அமைந்துள்ளன.

தனதன தனனந் தனதன தனனந் தனதன
                                                   தனனந் தனதான

Advertisement

விரகொடு வளைசங் கடமது தருவெம் பிணிகொடு
                                                    விழிவெங்  கனல்போல

வெறிகொடு சமனின் றுயிர்கொளு நெறியின் றெனவிதி
                                                    வழிவந் திடுபோதிற்

கரவட மதுபொங் கிடுமன மொடுமங் கையருற
                                                    வினர்கண் புனல்பாயுங்

கலகமும் வருமுன் குலவினை களையுங் கழல்தொழு
                                                     மியல்தந் தருள்வாயே

பரவிடு மவர்சிந் தையர்விட முமிழும் படவர
                                                      வணைகண் டுயில்மாலம்

பழமறை மொழிபங் கயனிமை யவர்தம் பயமற
                                                      விடமுண்டெருதேறி

அரவொடு மதியம் பொறிசடை மிசைகங் கையுமுற
                                                       அனலங் கையில்மேவ

அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங் கருணையில்
                                                        மருவும் பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.