பகுதி - 814
உன் திருவடியைச்..
‘உன் திருவடியைச் சூட்டியருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.
அடிக்கு ஒற்றொழித்து 18 எழுத்துகளையும் ஐந்து சீர்களையும் கொண்ட பாடல். ஒன்று, இரண்டு ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு மூன்று ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும்; ஐந்தாம் சீரில் இரண்டு நெடிலும் இரண்டு (கணக்கில் சேராத) மெல்லொற்றுகளும் அமைந்திருக்கின்றன.
தனதன தனதன தத்தத் தத்தத்
Advertisement
தாந்தாந் தனதானா
கொடியன பிணிகொடு விக்கிக் கக்கிக்
கூன்போந் தசடாகுங்
குடிலுற வருமொரு மிக்கச் சித்ரக்
கோண்பூண் டமையாதே
பொடிவன பரசம யத்துத் தப்பிப்
போந்தேன் தலைமேலே
பொருளது பெறஅடி நட்புச் சற்றுப்
பூண்டாண் டருள்வாயே
துடிபட அலகைள் கைக்கொட் டிட்டுச்
சூழ்ந்தாங் குடனாடத்
தொகுதொகு திகுதிகு தொக்கத் திக்குத்
தோந்தாந் தரிதாளம்
படிதரு பதிவ்ரதை யொத்தச் சுத்தப்
பாழ்ங்கான் தனிலாடும்
பழயவர் குமரகு றத்தத் தைக்குப்
பாங்காம் பெருமாளே.