முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 820

ஞானோபதேசம் பெறவேண்டும்..

Updated On : 9 மே, 2018 at 10:52 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:29 PM

‘ஞானோபதேசம் பெறவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் ஒரு நெடில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று, இரண்டு குறில் என்று மூன்றெழுத்துகளும்; ஐந்தாவதாக உள்ள தொங்கல் சீரில் ஒன்று அல்லது இரண்டு நெடில்களைக் கொண்ட நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனதன தாத்தனத் தனதானா

Advertisement

சருவிய சாத்திரத்                         திரளான

      சடுதிக ழாஸ்பதத்                   தமையாத

அருமறை யாற்பெறற்                     கரிதாய

      அனிதய வார்த்தையைப்             பெறுவேனோ

நிருதரை மூக்கறுத்                        தெழுபார

      நெடுதிரை யார்ப்பெழப்              பொருதோனே

பொருளடி யாற்பெறக்                     கவிபாடும்

      புலவரு சாத்துணைப்                பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.