முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 822

உனது திருவருள் துணை..

Updated On : 9 மே, 2018 at 5:22 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:30 PM

‘உனது திருவருள் துணை நிற்கவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 26 எழுத்துகளைக் கொண்ட அமைப்பு.  ஒன்று, ஐந்து ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; இரண்டு, ஆறு ஆகிய சீர்களின் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் என மூன்றெழுத்துகளும்; மூன்று, ஏழு ஆகிய சீர்களில் ஒரு நெடில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று, இரண்டு குறில் என மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனன தத்தன தாத்தன                    தனதானா

Advertisement

சமய பத்திவ்ரு தாத்தனை                 நினையாதே

  சரண பத்மசி வார்ச்சனை                தனைநாடி

அமைய சற்குரு சாத்திர                   மொழிநூலால்

  அருளெ னக்கினி மேற்றுணை           தருவாயே

உமைமு லைத்தரு பாற்கொடு             அருள்கூறி

  உரிய மெய்த்தவ மாக்கிந                லுபதேசத்

தமிழ்த னைக்கரை காட்டிய                திறலோனே

  சமண ரைக்கழு வேற்றிய               பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.