முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 840

உன்னை மலரிட்டுப் பூசை செய்ய

Updated On : 31 மே, 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:39 PM

‘உன்னை மலரிட்டுப் பூசை செய்ய வேண்டும்’ என்று கோரும் இப்பாடல், பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களின் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் அமைந்துள்ளன.

தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன

Advertisement

                தத்தனத் தத்ததன                                                    தனதான

மக்களொக் கற்றெரிவை பக்கமிக் கத்துணைவர்

                        மற்றுமுற் றக்குரவ                                        ரனைவோரும்

      வைத்தசெப் பிற்பணமும் ரத்நமுத் திற்பணியு

                        மட்டுமற் றுப்பெருகு                                      மடியாரும்

புக்குதுக் கித்தெரிகள் தத்தவைக் கப்புகுது

                        பொய்க்குமெய்க் குச்செயலு                    முருகாதே

      புஷ்பமிட் டுக்கருணை நற்பதத் தைப்பரவு

                        புத்திமெத் தத்தருவ                                       தொருநாளே

செக்கர்கற் றைச்சடையில் மிக்ககொக் கிற்சிறகு

                        செக்கமுற் றச்சலமு                                      மதிசூடி

      சித்தமுற் றுத்தெளிய மெத்தமெத் தத்திகழு

                        சித்தமுத் திச்சிவமு                                       மருள்வோனே

கொக்குறுப் புக்கொடுமை நிற்கும்வட் டத்தசுரை

                        கொத்தினொக் கக்கொலைசெய்          வடிவேலா  

      கொற்றவெற் றிப்பரிசை யொட்டியெட் டிச்சிறிது

                        குத்திவெட் டிப்பொருத                                பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.