முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 922

உன்னுடைய திருக்கழல்களைப் போற்றுகின்ற..

Updated On : 4 அக்டோபர், 2018 at 11:04 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:28 PM

‘உன்னுடைய திருக்கழல்களைப் போற்றுகின்ற உயர்ந்த குணசீலத்தைத் தந்தருளவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருத்தணிகைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 31 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக ஐந்தெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குறிலும் ஒரு நெடிலுமாக நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனத்ததன தனதான தனத்ததன தனதான

Advertisement

      தனத்ததன தனதான                தனதான

வரிக்கலையி னிகரான விழிக்கடையி லிளைஞோரை

         மயக்கிவிடு மடவார்கள்          மயலாலே

      மதிக்குளறி யுளகாசு மவர்க்குதவி மிடியாகி

         வயிற்றிலெரி மிகமூள           அதனாலே

ஒருத்தருட னுறவாகி ஒருத்தாரொடு பகையாகி

         ஒருத்தர்தமை மிகநாடி           யவரோடே

      உணக்கையிடு படுபாவி எனக்குனது கழல்பாட

         உயர்ச்சிபெறு குணசீல            மருள்வாயே

விரித்தருண கிரிநாத னுரைத்ததமி ழெனுமாலை

         மிகுத்தபல முடனோத           மகிழ்வோனே

      வெடித்தமணர் கழுவேற ஒருத்திகண வனுமீள

         விளைத்ததொரு தமிழ்பாடு       புலவோனே

செருக்கியிடு பொருசூரர் குலத்தையடி யறமோது

         திருக்கையினில் வடிவேலை     யுடையோனே

      திருக்குலவு மொருநீல மலர்ச்சுனையி லழகான

         திருத்தணிகை மலைமேவு       பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.