பகுதி - 926
ஆசை அறவேண்டும்..
‘ஆசை அறவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பழநிக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 36 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, இரண்டு, ஆறு, ஏழு ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும்; மூன்று, நான்கு, எட்டு, ஒன்பது ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலும், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக இரண்டெழுத்துகளும் அமைந்துள்ளன.
தனதனன தனதனன தானத் தானத் தனதானா
Advertisement
ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் துணரேனே
உனதுபழ நிமலையெனு மூரைச் சேவித் தறியேனே
பெருபுவியி லுயர்வரிய வாழ்வைத் தீரக் குறியேனே
பிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத் தவிரேனோ
துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப் பெருமாளே
தொழுதுவழி படுமடியர் காவற் காரப் பெருமாளே
விருதுகவி விதரணவி நோதக் காரப் பெருமாளே
விறன்மறவர் சிறுமிதிரு வேளைக் காரப் பெருமாளே.