முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 928

சாசுவதமான அறிவை அளித்தருள..

Updated On : 23 அக்டோபர், 2018 at 11:20 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:38 PM

‘சாசுவதமான அறிவை அளித்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருத்தணிகைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக மூன்றெழுத்துகளும்; இரண்டு, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக நான்கெழுத்துகளும்; மூன்றும் ஆறுமாக உள்ள தொங்கல் சீர்களில் இரண்டு குறிலும் இரண்டு நெடிலுமாக அமைந்துள்ளன. தொங்கல் சீரில் நெடிலெழுத்தின் அமைப்பு மாறி வரலாம்.

தனத்த தத்ததனத்                         தனதானா

Advertisement

நினைத்த தெத்தனையிற்                  றவராமல்       

      நிலைத்த புத்திதனைப்               பிரியாமற்   

கனத்த தத்துவமுற்                       றழியாமற்   

      கதித்த நித்தியசித்                   தருள்வாயே

மனித்தர் பத்தர்தமக்                       கெளியொனே   

      மதித்த முத்தமிழிற்                 பெரியோனே   

செனித்த புத்திரரிற்                        சிறியோனே   

      திருத்த ணிப்பதியிற்                 பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.