முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 912

சிவத்தைத் தந்தருள வேண்டும்..

Updated On : 24 செப்டம்பர், 2018 at 11:02 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:23 PM

‘சிவத்தைத் தந்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் மதுரைக்கு உரியது. முதற்பாடலான ‘முத்தைத் தரு பத்தித் திருநகை’யைப் பெரிதும் நினைவுபடுத்துவது.  ஆனால் சந்தத்தால் மாறுபட்டது. இப்பாடலில் மதுரை, ‘பத்மபுரி’ என்று குறிக்கப்படுகிறது. 

அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று முதல் ஆறுவரையிலான அத்தனைச் சீர்களிலும் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக நான்கு எழுத்துகள் அமைந்துள்ளன.

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன

Advertisement

                தத்ததன தத்ததன                                                    தனதான

முத்துநவ ரத்நமணி பத்திநிறை சத்தியிட

                        மொய்த்தகிரி முத்திதரு                             எனவோதும்

      முக்கணிறை வர்க்குமருள் வைத்தமுரு கக்கடவுள்

                        முப்பதுமு வர்க்கசுர                                       ரடிபேணி

பத்துமுடி தத்தும்வகை யுற்றகணி விட்டஅரி

                        பற்குனனை வெற்றிபெற                           ரதமூரும்

      பச்சைநிற முற்றபுய லச்சமற வைத்தபொருள்

                        பத்தர்மன துற்றசிவம்                                  அருள்வாயே

தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு

                        தெய்த்ததென தெய்த்ததென                  தெனனான

      திக்குவென மத்தளமி டக்கைதுடி தத்ததகு

                        செச்சரிகை செச்சரிகை                                யெனஆடும்

அத்தனுட னொத்தநட நித்ரிபுவ னத்திநவ

                        சித்தியருள் சத்தியருள்                               புரிபாலா

      அற்பவிடை தற்பமது முற்றுநிலை பெற்றுவள

                        ரற்கனக பத்மபுரி                                               பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.