முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 914

பரம்பொருளை உணர வேண்டும்..

Updated On : 26 செப்டம்பர், 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:23 PM

‘பரம்பொருளை உணர வேண்டும்’ எனக் கோரும் இப்பாடல் ஸ்ரீ புருஷ மங்கை என்னும் தலத்துக்கானது.  தற்காலத்தில் இத்தலம் நாங்குநேரி என்று வழங்கப்படுகிறது.

அடிக்கு ஒற்றொழித்து 31 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும மூன்று குறிலுமாய் நான்கெழுத்துகளும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களில் இரண்டு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றுமாய் இரண்டெழுத்துகளும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களில் மூன்று குறிலும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றுமாய் மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தானதன தந்த தந்தன

Advertisement

      தானதன தந்த தந்தன

      தானதன தந்த தந்தன               தனதான

ஆடல்மத னம்பின் மங்கைய

         ராலவிழி யின்பி றங்கொளி

         யாரமத லம்பு கொங்கையின்     மயலாகி

      ஆதிகுரு வின்ப தங்களை

         நீதியுட னன்பு டன்பணி

         யாமல்மன நைந்து நொந்துட     லழியாதே

வேடரென நின்ற ஐம்புல

         னாலுகர ணங்க ளின்தொழில்

         வேறுபட நின்று ணர்ந்தருள்       பெறுமாறென்

      வேடைகெட வந்து சிந்தனை

         மாயையற வென்று துன்றிய

         வேதமுடி வின்ப ரம்பொரு       ளருள்வாயே

தாடகையு ரங்க டிந்தொளிர்

         மாமுனிம கஞ்சி றந்தொரு

         தாழ்வறந டந்து திண்சிலை       முறியாவொண்

      ஜாநகித னங்க லந்தபின்

         ஊரில்மகு டங்க டந்தொரு

         தாயர்வ சனஞ்சி றந்தவன்        மருகோனே

சேடன்முடி யுங்க லங்கிட

         வாடைமுழு தும்ப ரந்தெழ

         தேவர்கள்ம கிழ்ந்து பொங்கிட    நடமாடுஞ்

      சீர்மயில் மஞ்சு துஞ்சிய

         சோலைவளர் செம்பொ னுந்திய

         ஸ்ரீபுருட மங்கை தங்கிய          பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.