இந்த நாளில் அன்று - (04.08.1941) - பூர்ண சுதந்தரமே வேண்டும்; குறைவான எதையும் ஏற்கமாட்டோம் - காந்திஜி அறிக்கை
பூர்ண சுதந்தரமே வேண்டும்; குறைவான எதையும் ஏற்கமாட்டோம் என்று காந்திஜி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பூர்ண சுதந்தரமே வேண்டும்; குறைவான எதையும் ஏற்கமாட்டோம் என்று காந்திஜி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மகாத்மா காந்தி, பத்திரிகைகளுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
'லுக் என்ற அமெரிக்க பத்திரிகைக்கு நான் கொடுத்ததாக கூறப்படும் பேட்டியொன்றில், நான் சொன்னவை என்ற செய்தியொன்று பத்திரிகைகளில் வெளி வந்திருப்பதைக் கண்டேன். அது சுத்தப் புளுகாகும். அந்தப் பத்திரிகையின் பெயர்கூட எனக்கு இதற்கு முன்போ, இப்பொழுதோ தெரியாது. நான் ஏற்கெனவே சொல்லியுள்ளவைதான் எனது மனப்பான்மை. பூர்ண சுதந்தரத்துக்குக் குறைவான எதையும் கொண்டு காங்கிரஸ் திருப்தி அடையாது' என்று காந்திஜி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement