இந்த நாளில் அன்று(31.07.2003)கோயில் அன்னதானத் திட்டம்: 3 மாதச் சம்பளம் ரூ.30 ஆயிரத்தை வழங்கினார் ஜெயலலிதா
சென்னையில் உள்ள அருள்மிகு காளிகாம்பாள் கோயில் உள்ளிட்ட மூன்று கோயில்களின் அன்னதானத் திட்டத்துக்காக தலா ரூ.10 ஆயிரத்தை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
சென்னையில் உள்ள அருள்மிகு காளிகாம்பாள் கோயில் உள்ளிட்ட மூன்று கோயில்களின் அன்னதானத் திட்டத்துக்காக தலா ரூ.10 ஆயிரத்தை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
திருக்கோயில் அன்னதானத் திட்டத்துக்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஜெயலலிதா தனது சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் ஒரு கோயிலுக்கு வழங்கி வருகிறார்.
அதன்படி, ஏப்ரல் மாதச் சம்பளத்தை அருள்மிகு காளிகாம்பாள் கோயிலுக்கு வழங்கினார்.
Advertisement
மே மாதச் சம்பளத்தை ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி கோயிலுடன் இணைக்கப்பட்டுள்ள திருவெள்ளரை புண்டரீகாட்சப் பெருமாள் கோயிலுக்கு வழங்கினார்.
ஜூன் மாதச் சம்பளத்தை தஞ்சாவூர் மாவட்டம் ஏந்தல் அருள்மிகு நீலகண்டப் பிள்ளையார் கோயில் அன்னதானத் திட்டத்துக்காக வழங்கினார்.