முகப்பு
இந்த நாளில்...

15.10.1931: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாள் இன்று!

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் 15.10.1931 அன்று தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார்.

Updated On : 15 அக்டோபர், 2016 at 12:00 AM
பகிர்:

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் 15.10.1931 அன்று தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.

கலாம் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார்.

1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையிலும், நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக அவர் முக்கிய பங்காற்றினார்

Advertisement

பணி ஓய்வுக்கு பிறகு 2002 ஆம் ஆண்டில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வென்று இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 25 ஜூலை 2002 முதல் 25 ஜூலை 2007 வரை பணியாற்றினார். அவரின் ஜனாதிபதி காலத்தில், மக்களால் அவர் அன்போடு "மக்களின் ஜனாதிபதி" என்று அழைக்கப்பட்டார்

அந்த பதவியிலிருந்து ஓய்வு பெற்ற  பின் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களோடு உரையாடுவதில் பெரும் விருப்பு கொண்டிருந்தார். அப்படியான ஒரு நிகழ்வில், ஜூலை 27, 2015-ல்  மேகாலயாவின்  தலைநகரான ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் மயங்கி விழுந்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.