கல்வி மணி

TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 20

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி - புறப்பொருள் வெண்பாமாலை

தினமணி

உரைநடை: உலகளாவிய தமிழர்

* கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி - புறப்பொருள் வெண்பாமாலை

* உலகில் உள்ள 235 நாடுகளில் ஏறத்தாழ 154 நாடுகளில் தமிழர்கள் உள்ளனர்.

* இருபது நாடுகளில் இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர் வாழ்கின்றனர்.

* சாதுவன் வணிகம் செய்யும் பொருட்டு கடல் கடந்து சென்ற குறிப்பு மணிமேகலையில் உள்ளது.

* வாணிகம், வேலைவாய்ப்பு காரணமாகவே தமிழர்கள் அயல்நாடுகளுக்கு சென்று வந்தனர்.

* இது குறித்து செய்தி சங்க இலக்கியங்களிலும் காணப்படுகிறது.

* திரைகடலோடியும் திரவியம் தேடு என்றவர் - ஒளவையார்.

* சிங்கப்பூர், மலேசியா, பினாங்குத் தீவு ஆகிய நாடுகளில் கோவில்கள் கட்டி ஆண்டுதோறும் திருவிழாக்களைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

* ரியூனியன் தீவில் வாழ்பவர்கள் பெரும்பாலும் தமிழர்களே.

* இலங்கையில் வாழும் தமிழர்களில் 95 விழுக்காட்டினர் தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழிலேயே கல்வி கற்கின்றனர்.

* இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் தமிழ், ஆட்சிமொழியாகத் திகழ்கிறது.

* சாதுவன் வாணிகம் செய்யும் பொருட்டுக் கடல் கடந்து சென்ற குறிப்பு மணிமேகலையில் உள்ளது.

* இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளின் ஆட்சி மொழியாகத் தமிழ் திகழ்கிறது.

* உலகெங்கும் அச்சு ஒலி, ஒளி ஊடகங்களை தமிழர் நடத்தி வருகின்றனர்.

துணைப்பாடம்: திரு.வி.கலியாணசுந்தனாரின் தமிழ் பணி

பிறப்பும் கல்வியும்:

* சென்னைக்கு அருகே துள்ளம் என்னும் ஊரில் விருதாச்சலனார் - சினம்மையாரின் மகனாக 26.08.1883 ஆம் நாள் பிறந்தார்.

* சென்னை ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் படித்தார்.

* கதிரைவேலனாரிடம் தமிழ் இலக்கியங்களையும் சைவ சித்தாந்த சாத்திரங்களையும் படித்தார்.

தமிழ் பற்று:

* "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என்பதை முழு மூச்சாக கொண்டார்.

* வடமொழிச் சொற்களை கலவாமல் தூய தமிழிலே எழுதவும் பேசவும் செய்தார்.

பிறமொழியறிவு:

* தமிழை வளர்க்க பிற மொழியை வெறுக்க வேண்டும் என்பது பொருளல்ல என்றார்.

* * ஆங்கிலத்தில் மிக்க புலமை பெற்றிருந்தார்.

காந்தியடிகள் தமிழகம் வந்த போதெல்லாம் அவரின் மேடை பேச்சை மொழிபெயர்த்தார்.

இளைஞர்களுக்கு அறிவுரை:

* இளைஞர்களே! தமிழுலகின் இழிந்த நிலை ஊறுங்கள்; ஓர்ந்து உங்கள் பொறுப்பை உணருங்கள்; தமிழ்த்தையைப் புதுப்போர்வையில் ஒப்பனை செய்து அரியாசனத்தில் அமர்த்த சூள்கொண்டு எழுங்கள்; எழுங்கள்; பழந்தமிழ் வீரத்துடன் எழுங்கள்" என்று அறைகூவல் விடுத்தார்.

பேசுப்பணி:

* "திரு.வி.க நடை" என்ற ஒரு தனி நடையை நடைமுறைப் படுத்தினார்.

* பேசுவது போலவே எழுதுவது, எழுதுவது போலவே பேசுவது ஆகும்.

* அறிஞர் அண்ணா உள்ளிட்ட அக்கால இளைஞர்களை தன் உணர்ச்சிமிகு பேச்சால் தம்பால் ஈர்த்தார்.

எழுத்துப்பணி:

* உரைநடை எழுதுவது எனது தொழில் என்று கூறினார்.

* "அவருக்கு வாய்ந்த மொழிநடை மலை எனத் தமிழுலகில் ஓங்கி உயர்ந்துள்ளது" என்று தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் பாராட்டி உள்ளார்.

உரைநடை நூல்கள்:

* மனித வாழ்கையும் காந்தியடிகளும்

* பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணைநலம்

* இமயமலை அல்லது தியானம்

* முருகன் அல்லது அழகு

* சைவத்திரு

* சைவத்தின் சமரசம்

* கடவுட் காட்சியும் தாயுமானவரும்

* இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்

* தமிழ்நாடும் நம்மாழ்வாரும்

* நாயன்மார் வரலாறு

* தமிழ்நூல்களில் பெளத்தம்

* காதலா? முடியுமா? சீர்திருத்தமா?

* என் கடன் பணிசெய்து கிடப்பதை

* இந்தியாவும் விடுதலையும்

* தமிழ்ச்சோலை

* உள்ளொளி

செய்யுள் நூல்கள்:

* முருகன் அருள்வேட்டல்

* திருமால் அருள்வேட்டல்

* கிருத்துவின் அருள்வேட்டல்

* அருகன் அருகே

* உரிமை வேட்டல்

* பொதுமை வேட்டல்

* பொருளும் அருளும் அல்லது மார்க்சியமும் காந்தியடிகளும்

இதழ்ப்பணி:

* தேசபக்தன், நவசக்தி என்னும் இதழ்களின் வாயிலாகத் தொழிலாளர் முன்னேற்றம் பெறப் பாடுபட்டார்.

தமிழ் வாழ்வினர்:

* வயதாகி படுக்கையில் இருந்த போதும் வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுகைப் பிதற்றல்" என்னும் நூலை மு.வ உதவியுடன் வெளியிட்டார்.

* அவர் மனைவி இறந்த போதும், "நான் தனியாக வாழவில்லை; தமிழோடு வாழ்கிறேன்" எனக் கூறியவர்.

* 1953 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் பதினேழாம் நாள் தமது எழுபத்தோரம் வயதில் இறந்தார்.

உமர்கய்யாம் பாடல்கள்

சொற்பொருள்:

* பகர்வது - சொல்வது

* தெளிவீரே - தெளியுங்கள்

* துவ்வா - நுகராத

* அகன்று - விலகி

* ஆழி - கடல்

இலக்கணக் குறிப்பு:

* நோக்கி - வினையெச்சம்

* துவ்வா விடம் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

ஆசிரியர் குறிப்பு:

* கவிமணி தேசிக விநாயகனார் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் பிறந்தவர்.

* பெற்றோர் - சிவதாணு - ஆதிலட்சுமி அம்மையார்

* மொழிபெயர்ப்பு - உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். அப்பாடல்களின் தொகுப்பு "உமர்கய்யாம் பாடல்கள்" என்பது.

* இவர் கணிதம், வானவியல் ஆகியவற்றில் புலமைமிக்கவர்.

* இவரின் கவிதைகள் மக்கள் அடையும் இன்ப துன்பங்களையும், இறைவனது படைப்பையும் பாடுபொருளாகக் கொண்டவை.

* உமர்கய்யாம் பதினொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீக கவிஞர்.

* இவரின் முழுப்பெயர் கியதுதின் அபுல்பாத் உமர்கய்யாம் எனபது.

இயற்றிய நூல்கள்:

* மலரும் மாலையும்

* மருமக்கள் வழி மான்மியம்

* குழந்தைச் செல்வம்

* ஆசிய ஜோதி

* காலம்: 1876 - 1954 ஆம் ஆண்டு வரை.

நூற் குறிப்பு:

* இந்நூல் இம்மை மறுமை பற்றி ரூபாயத் என்னும் பெயரில் உமர்கய்யாம் எழுதிய செய்யுள்களின் மொழி பெயர்ப்பு.

* இதனையே கவிமணி மொழிபெயர்த்துள்ளார்.

* இதில் நூற்றுப் பதினைந்து பாடல்கள் உள்ளன.

* வாழ்க்கைத் தத்துவத்தை இப்பாடல்கள் விளக்குகின்றன.

* ரூபாய் என்பது நான்கடிச் செய்யுள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்- சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

உத்தரகண்ட் இயற்கை பேரிடர்: 10 ஆண்டுகளில் 3,500 பேர் பலி

“காஸாவில் எப்போது சண்டையை நிறுத்துவீர்கள்?” -இஸ்ரேலில் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

ஆஸி.யை முதல்முறையாக ஆல் அவுட் செய்த தெ.ஆ.: சதமடிக்க தவறிய டிம் டேவிட், ஆஸி. 178 ரன்கள்!

புதிய சிம் கார்ட் வாங்கியவருக்கு கிரிக்கெட் வீரரின் பழைய மொபைல் எண் ஒதுக்கப்பட்டதால் குழப்பம்

SCROLL FOR NEXT