முகப்பு
கவிதைமணி

எல்லைக் கோடு: சசி எழில்மணி

Updated On : 21 ஆகஸ்ட், 2016 at 5:58 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:40 PM

வாழும் மக்கள் யாவரும்
அமைதியாகத் தான் வாழ
எல்லையில்  பணி புரிவார்
அண்டைநாட்டு  அயலாரும்
அனுமதியின்றி உள்நுழைய
எதிர்த்து நின்றே முறியடிப்பார்
தீவிரவாதியும்
பிரிவினைவாதியும்
கொடுஞ்செயல் செய்யவே
திட்டங்கள் தீட்டிட
தன்னுயிரைக் கருதாது
நாட்டுக்கென அர்ப்பணிப்பார்
உறக்கம் மறந்து
உறவைத் துறந்து
சரிவர உணவும்
உண்ணாமல் கிடந்து
சீருடை அணிந்து
காடுகளில் திரிந்து

ஆயுதம் ஏந்தியே
பல இடம் நடந்து
காத்திடுவார் நம்நாட்டை
கொண்டாடுவோம் அவர் அர்ப்பணிப்பை
போற்றிடுவோம் எல்லைக் கோட்டை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.