எதிர்கால கனவு :முத்துலெட்சுமி ஜெய்குமார்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:41 PM
இருக்க இடம்,
உண்ண உணவு
உடுத்த உடையின்றி தவிக்க
சாலையோர நடுத்தரவாசிகள் வாழ்க்கை
எங்கே காண்பது வல்லரசு கனவுகளை!
பிறப்பு முதல்
இறப்பு வரை
இடைவிடாத தேடல்
முழுமையாக ஒன்று அகப்படும்
தருணத்தில் முற்றும் முடிந்து விடுகிறது
மனித வாழ்க்கை
ஆசையை கொடுத்து
வாழ்வென்றான் இறைவன்
களவாகி போனது
கல்வி சிற்ப சிலையாகி போனது
சொப்பனத்தில் கண்ட பாட நூலை
வறுமை உரைத்தது
சக்கரை என்று எழுதி நாவால்
நக்கினால் இனித்துடுமா
ஒருவன் தன் பெயரை எழுதிவிட்டால்
படிப்பறிவு அற்ற தேசமாக மாறிடுமா ?