வான மழைநீ யெனக்கு: சாலை கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:42 PM
வான மழைநீ யெனக்குன்றன்
வாய்ச்சொல் சிதறி வந்தமிழ்து
தான மாக தந்தென்னைத்
தழைக்க வைத்த தண்டமிழே!
ஞான வழியில் இருந்தயென்றன்
நாதன் வாய்மை மெய்யமுது
கான மழையாய்ப் பொழிந்தென்யுள்
காவல் நிற்கும் சொல்லமுதே!
சின்ன சின்ன துளியாச்சு!
சிந்தி வழியும் பொருளாச்சு!
கன்னல் கரும்பின் சுவையாச்சு!
காற்றைக் கிழித்து வெளியாச்சு!
முன்னம் இருந்து வரலாச்சு!
முத்தி நல்கும் வழியாச்சி!
இன்ப வெள்ள உணர்வாச்சு!
என்றும் மகிழும் வாழ்வாச்சே!