வான மழை நீ யெனக்கு: அதி. இராஜ்திலக்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:42 PM
ஆகாய காவிரியாய்,
அணையில்லா பாலாறாய்,
வான் மழையே நீயெனக்கு,
வந்ததினால் வாழ்விருக்கு!
வாடாத நெல்லிருக்க,
வயல்கொண்டு நாமிருக்க,
மூடாத பெரியாற்றில்,
முடங்காது நீயிருப்பாய்
நீயின்றி நிலமுண்டோ !
நிலமின்றி உயிருண்டோ!
உயிரின்றி உலகுண்டோ !
உலகினிலே மகிழ்வுண்டோ !
மகிழ்வென்றும் தொடர்ந்துவிட
மாதம் மூன்றாய் வந்துவிட
மாரியென்று தொழுதிருப்போம்
மண்ணிலுள்ள உயிர்களோடு!