முகப்பு
கவிதைமணி

வான மழை நீ யெனக்கு: அதி. இராஜ்திலக் 

Updated On : 31 ஆகஸ்ட், 2016 at 4:53 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:42 PM

ஆகாய  காவிரியாய்,
அணையில்லா பாலாறாய்,
வான் மழையே நீயெனக்கு,
வந்ததினால் வாழ்விருக்கு!
வாடாத நெல்லிருக்க, 
வயல்கொண்டு நாமிருக்க,
மூடாத பெரியாற்றில், 
முடங்காது நீயிருப்பாய்
நீயின்றி நிலமுண்டோ !
நிலமின்றி உயிருண்டோ!
உயிரின்றி உலகுண்டோ !
உலகினிலே மகிழ்வுண்டோ !
மகிழ்வென்றும் தொடர்ந்துவிட 
மாதம்  மூன்றாய் வந்துவிட 
மாரியென்று தொழுதிருப்போம் 
மண்ணிலுள்ள உயிர்களோடு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.