கவிதைமணி

வான மழை நீ யெனக்கு: அ. வேளாங்கண்ணி

கவிதைமணி

வான மழை நீ யெனக்கு
கானம் தருவேன் உனக்கு
சின்னப் பூவின் இதழாய் நீயே
வண்ண நிலவின் உருவாய் நீயே
என்னை முழுதும் ஆண்டு கொண்டாயே
எண்ணம் முழுதும் நீ ஆனாயே..
 
சிக்க வைத்த மங்கை நீயே
சிக்கிக் கொண்ட மானுடன் நானே
மக்கி போக இருந்த மனதை
தக்க வைக்க இதயம் தந்தாய்..
நக்கலிடை என் பெயர் சொன்னால்
துக்கமிலை என் இனிய பெண்ணால்..
 
வஞ்சி யுனை என்னில் வைத்தேன்
அஞ்சி அஞ்சி கவிதை தைத்தேன்
செஞ்சி நகர் சிற்பமும் நீயோ
அஞ்சல் வழி காதல் சொல்வாயோ
நெஞ்சில் உந்தன் நினைவை நிறுத்தி
கஞ்சி யின்றி நாட்களைக் கடத்தி..
 
செல்லுகிறேன் என் வழி நானே
சொல்லுகிறேன் உன் கதை தானே
கொல்லுவது உன் விழி தானே
மெல்லுவதும் உன் மொழி தானே
அள்ளிக் கொண்ட அழகிய பெண்ணே
தள்ளிச் செல்லாய் மீன்விழிக்
கண்ணே...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT