கவிதைமணி

அழுத கண்ணீர் : ம.அஹமது நவ்ரோஸ் பேகம்

கவிதைமணி

காயங்களின் காரணமாக உருவமுள்ள  உறுப்புகளில் 
இருந்து   செந்நீர் வடிதல் போல், உருவமில்லா 
மனதின் காயங்களால் கண்களில் இருந்து கண்ணீர் வடியும். 

அழுவது கண்கள் என்றாலும் கண்ணீரும் அழும்.
தூங்காமல் விழித்திருக்கும் துயரங்களைத் 
தாலாட்டித் தூங்க வைத்து கன்னங்களின் 
மேடுகளில் உப்பளங்களாகும் அழுத கண்ணீர்.

அடங்காமல் பெருக்கெடுத்து ஓடும் 
அழுத கண்ணீரை அடக்க முடியாமல்,
இமை அணைகள், வீக்கமாகித் தம் தோல்வியை 
ஒப்புக் கொண்டு,கண்ணீரின் துயரத்தில் தாமும் பங்கு கொள்ளும்..

தேற்றுவோர் யார் யாரோ இருந்தாலும் அழுத 
கண்ணீரே ஆறாத துயரங்களை ஆற்றுப்படுத்தி 
தானும் கண்களுக்குள் அடங்கும்.

உடலின் காயங்களை ஆற்றும் மருந்து போல் 
ஆறாத  மனதின் துயரங்களுக்கு 
அழுத கண்ணீரே உற்ற தோழன் 
போல இதமான  மருந்தாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம்!

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...

திருப்பதி லட்டு விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

மாற்றத்தை ஏற்படுத்திய தமிழர் பண்பாடு

SCROLL FOR NEXT