கவிதைமணி

அழுத கண்ணீர்: கவிஞர் இரா .இரவி 

கவிதைமணி

சென்ற வருடம் மழை வெள்ளம் வந்து 
சென்னையை அழ  வைத்தது !

இந்த வருடம் புயல் வேகமாக வந்து 
சென்னையை அழ  வைத்தது !

இயற்கையின்  சீற்றம்   கண்டபின்னும்  
இன்னும் திருந்தாமல் இருக்கலாமா ?   

மலைகளை   வெடி வைத்து தகர்த்து 
மலை போல கற்களை விற்பதை நிறுத்து !

மணலை ஆற்றில் அளவின்றி எடுத்து 
மண் வண்டியில் ஏற்றுவதை நிறுத்து !

நிலத்தடி நீரை மின்சாரக் கருவிகளால்
நிர்மூலம் ஆக்குவதை முதலில் நிறுத்து !

அளவிற்கு  மிஞ்சினால் அமுதமும் நஞ்சு 
அளவின்றி சிதைப்பதை உடன் நிறுத்து !

நானே பெரியவன் என்ற  அகந்தை அகற்று 
நானிலத்தில் இயற்கையே பெரிது உணரு ! 

இயற்கையை   நீ சிதைக்கச் சிதைக்க 
இயற்கை உன்னை  சிதைக்கும் உணர்ந்திடு !

அழுத கண்ணீர் போதும் இனி ஒருபோதும் 
அழக்கூடாது அன்புகாட்டு இயற்கையிடம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்வை ஒன்றே போதும்... அஞ்சு குரியன்!

மயிலாடுதுறை: குறைதீா் கூட்டத்தில் 287 மனுக்கள்

ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி பங்குகளை ரூ.676 கோடிக்கு விற்பனை செய்த ஜிக்யூஜி பார்ட்னர்ஸ்!

முதல் டி20: தென்னாப்பிரிக்காவை பந்தாடிய இந்தியா - 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

இளமை வாசம்... அனுஷ்கா சென்!

SCROLL FOR NEXT