கவிதைமணி

அழுத கண்ணீர்: கவிஞர் இரா .இரவி 

கவிதைமணி

சென்ற வருடம் மழை வெள்ளம் வந்து 
சென்னையை அழ  வைத்தது !

இந்த வருடம் புயல் வேகமாக வந்து 
சென்னையை அழ  வைத்தது !

இயற்கையின்  சீற்றம்   கண்டபின்னும்  
இன்னும் திருந்தாமல் இருக்கலாமா ?   

மலைகளை   வெடி வைத்து தகர்த்து 
மலை போல கற்களை விற்பதை நிறுத்து !

மணலை ஆற்றில் அளவின்றி எடுத்து 
மண் வண்டியில் ஏற்றுவதை நிறுத்து !

நிலத்தடி நீரை மின்சாரக் கருவிகளால்
நிர்மூலம் ஆக்குவதை முதலில் நிறுத்து !

அளவிற்கு  மிஞ்சினால் அமுதமும் நஞ்சு 
அளவின்றி சிதைப்பதை உடன் நிறுத்து !

நானே பெரியவன் என்ற  அகந்தை அகற்று 
நானிலத்தில் இயற்கையே பெரிது உணரு ! 

இயற்கையை   நீ சிதைக்கச் சிதைக்க 
இயற்கை உன்னை  சிதைக்கும் உணர்ந்திடு !

அழுத கண்ணீர் போதும் இனி ஒருபோதும் 
அழக்கூடாது அன்புகாட்டு இயற்கையிடம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் கடும் பனிமூட்டம்: மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கம்!

சொல்லப் போனால்... விஜய்யின் அரசியல் களமும் சினிமா கால்ஷீட்டும்!

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் வளா்ந்து வரும் வணிகப் பிரிவில் 100-ஆவது கிளை திறப்பு

இன்று சாதகமான பலன் யாருக்கு? தினப்பலன்கள்!

அந்நியச் செலாவணி கையிருப்பு 72,377 கோடி டாலராக அதிகரிப்பு! புதிய உச்சம்

SCROLL FOR NEXT