முகப்பு
கவிதைமணி

பட்டாசுச் சத்தம்: அருள் .க.  இராபர்ட் 

Updated On : 1 நவம்பர், 2016 at 4:29 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:06 AM
காலைக் கதிரவன் உதிக்கும் முன்னேகாகம் குருவி கிளிகளின் சத்தம்வேலைக்குச் செல்ல புறப்படவேண்டிவிழிப்பைக் கொடுக்கும் மணிப்பொறிச்சத்தம்பால்காரப்பையன் கீரைக்கிழவியின்பழகிப்போன பயங்கரச் சத்தம்காலைக்கடன்களை முடிக்கச்ச்சொல்லிகுழந்தையைத் திட்டும் மனைவியின் சத்தம்வண்டி வாகனம் வாய்மொழிப் பேச்சுவந்து  போகும் வழக்காறுச் சத்தம் நண்பன் பேச அவசரஅழைப்பாய்நாதமாய் அழைக்கும் கைபேசிச் சத்தம்அன்றும் இன்றும் என்றும்  இதுவேஅலுவல்போல தொடர்ந்திடும்வேளைதினமும் நடக்கும் நடைமுறை மாறிதிடீரென வெடித்த பட்டாசுச் சத்தம்எங்கும் இசையை பரப்பும் பறவைகள்ஏதோவிபத்தென அலறும் சத்தம்தூங்கும் குழந்தை துள்ளி எழுந்துதுடித்து கதறி அழுகும் சத்தம்தாங்கமுடியா நோயில் துடிக்கும்தாத்தாப் பாட்டியின் துயரின் சத்தம்தங்கியிருக்கும் மருத்துவமனையில்தவிக்கும் நோயாளி துடிக்கும் சத்தம்இத்தனை துயர் மிகு சத்தம் இருந்தும்தீபாவளியின்  பட்டாசுச் சத்தம்எத்தனை மகிழ்வைத் தந்திட்டபோதிலும் ஏதோ மனதில் நெருடும் சத்தம்நித்தம் நித்தம் மகிழ்வைத் தேடிநீண்டு வெடிக்கும் பட்டாசு ஒலியின்சத்தமே இல்லாத மத்தாப்பு ஒளியில்சந்திப்பதுதான் மகிழ்வின் சத்தம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.