கவிதைமணி

பட்டாசு  சத்தம்: கே. நடராஜன்

கவிதைமணி
பட்டாசு சத்தத்தில் பறக்க மறந்தன பறவைகள் ...கண் 
திறக்காமல் பயந்து  அழுதன    சிறு குழந்தைகள் !
மறக்காமல்  இனிப்பு சுவைத்து வாழ்த்துக்கள் சொன்னது 
"பெரிய" மனிதர்கள் நாம் மட்டுமே !  !   ஆனால் ...வெடித்த 
பட்டாசு சத்தத்தில் நாமும் மறந்தது நமக்கு பட்டாசு கொடுக்கும் 
அந்த சிவகாசி சிறாரின்  அவல நிலையை !...வான வேடிக்கை 
வெளிச்சத்திலும் நாம் நினைத்துப் பார்க்க   மறந்தது ஒரு சிவகாசி தொழிலாளியின் 
இருண்ட   வாழ்க்கையை ...!  அது மட்டுமா ?
நீரின்றி வாடும் தன்  நிலம் பார்த்து சத்தம்  போட்டு 
அழும் அந்த  உழவனின்  மனக்குமுறலை  மறைத்ததும் 
இந்த பட்டாசு சத்தம்தான் !
சுத்தமான காற்று  சத்தமில்லாமல்  தொலைந்து 
மறைந்து போனதும் இந்த பட்டாசு  சத்தம் போட்டு 
விட்ட கரும் புகையினால்தானே !
தீப ஒளி மட்டும்  ஏற்றி  புத்தாடையுடன் பலகாரமும்  நலிந்தோர் 
வீட்டுக் குழந்தைகளுடன்   பகிர்ந்து மகிழும் பண்பை நம் பிள்ளைக்கு 
நாம் போதிக்க வேண்டும் ஒரு பால பாடமாக ! இந்த பாடம் 
ஒரு நல்ல வித்தாகும் பட்டாசு சத்தமும் புகையும் இல்லா தீபாவளி 
திருநாள் ஒருநாள் பூத்து மலர !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT