கவிதைமணி

பட்டாசு சத்தம்: ரா.பார்த்தசாரதி

கவிதைமணி
மக்களுக்கு  மகிழ்ச்சியும், ஆனந்தமும்  நிறைந்த பண்டிகை,எல்லோரும்,  ஒன்றுகூடி , மகிழ்ச்சியுடன்  கொண்டாடும் பண்டிகைவாழ்த்துகளை, நாம் பகிர்ந்துகொள்ளும் தீபாவளி பண்டிகை ,சந்தோஷமும் , உல்லாசமும் கலந்த தீபாவளி பண்டிகை!விடியற்காலையில் எழுந்து  எண்ணெய் தேய்த்து குளித்து ,மகிழ்வுடனே    புத்தாடை  உடுத்தி,   இனிப்பினை பகிர்ந்து,பெரியவர்களிடம் வாழ்த்தும், நல்லாசியும் பெற்றுஊர் எங்கும்  ஒன்றாய் கலந்து கொண்டாடும்  தீபாவளி!நாட்டில் உள்ளவர்கள் பல விதமாய் கொண்டாடும் தீபாவளி வடக்கே விளக்கு பூஜை என் கொண்டாடும் தீபாவளி,இல்லறத்தில் இனிப்பு கொண்டு கொண்டாடும் தீபாவளி,புன்சிரிப்புடன், மன நிறைவாய்  , வாழ்த்து பெரும் தீபாவளி !வெடியும், சரமும், மத்தாப்பும் கையில் ஏந்துவோமே பட்டாசு  சப்தமும், சித்திர பூப்போல சிதறும் மத்தாப்பினை காண்போமே,மாலையில் கம்பி மத்தாப்பையும் நம் கையில் பிடிப்போமே,சங்கு சக்கரம், புஸ்வாணப்  பூக்களின் சிதறலை கண்டு களிப்போமே !அசுரன்  நினைவாக  நாம்   தீபாவளி பண்டிகை கொண்டாடுகிறோமே  பட்டாசு சத்தத்தால் புகையும், சுற்றுப்புறசூழலையும் கெடுக்கின்றோமே பார்வையற்றவர்கள் விடுதிக்கும், முதியோர் இல்லத்திற்கும்   செல்வோமே அவர்களுடன் இனிப்பினை பகிர்ந்து தித்திக்கும் தீபாவளி கொண்டாடுவோமே!நாம் பெற்ற  செல்வத்தை  நலமுடனே காப்போமே ஈதல்  இசைபட வாழ்தல் எனும் வள்ளுவனின் வாக்கினை ஏற்போமே ,அண்டை, அயலாருடன் நட்பும் நல்லுறவு  பேணுவோமே பண்டிகை நல்லதென்  வாய்ப்பு தந்ததென சொல்வோமே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT