கவிதைமணி

பட்டாசு சத்தம்:  - கோ. மன்றவாணன்

கவிதைமணி

அக்கம் பக்கத்து
வீட்டு வாசல்களில்
இடியோ
வெடியோ என
சிவகாசி பட்டாசு
சீறிச் சிதறுகிறது

தரையில் சுற்றும்
தங்கக் கிரகம்போல்
சுழன்று நகர்கிறது
சங்குச் சக்கரம்

ஒளிப்புனலை
வானை நோக்கிப் பீய்ச்சி அடிக்கிறது
கலசம்

சிரிப்பு உதிர்க்கும்
சின்னக் குழந்தைகளுக்குப் போட்டியாகச்
சிதற விடுகிறது
ஒளிச்சிரிப்பை
மத்தாப்பூ

காலி பாட்டலை ஏவுதளமாக்கி
விண்ணில் வளைந்து நெளிந்து
பாய்கிறது ராக்கெட்
குப்பத்துக்
குடிசை வீடுகளைப் பயமுறுத்திவிட்டு

வெற்று அரசியல்வாதிகளின்மே
டைப் பேச்சைப்போல்
வேடிக்கை காட்டிவிட்டுத்
தெருவைக் குப்பையாக்குகிறதுஊசிப்
பட்டாசு

தன்வீட்டு வாசலில் மட்டும்பட்டா
சு சத்தம் கேட்கவில்லையே என
ஏங்கிய ஏழைச்சிறுமி
வெடிக்காத பட்டாசுகளின் மருந்துகளைச்
சேகரித்து வந்து
பொட்டலம் கட்டினாள்

பாதி எரிந்தவிந்த
திரியொன்றைப் பொருத்தித்
தீப்பற்ற வைத்தாள்

அவளுக்கு மட்டுமே கேட்குமாறு
அது புஸ்ஸென்று சத்தமிட்டு
அமுங்கிப் போனது

ஒடுக்கப்பட்டு
ஓரம் ஒதுங்கிய மக்களின்
நியாயக்குரலைப் போலவே…!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT