கவிதைமணி

பட்டாசு சத்தம்:  கவிஞர் " இளவல் " ஹரிஹரன்,

கவிதைமணி
பட்டாசுச் சத்தத்தில் பகட்டி ருக்கும்​      பலபேரின் மகிழ்வதிலே இணைந்தி ருக்கும்கட்டாய அனுபவமாய் எல்லோ ருக்கும்      கண்முன்னே வெடிச்சத்தம் கேட்டி ருக்கும்தொட்டுத்தொ டாமலேயே தீக்கங் கொன்றை      தெருநடுவே ஊதியபடி வெடியின் மீதுபட்டுவிடும் அவசரமாய்ப் பதைப தைத்துப்      பட்டுவிடப் படீரென்று வெடிவெ டிக்கும்.சிறுவயதில் காசுசேர்த்து வெடிகள் பார்த்து       சீனிவெடி லட்சுமிவெ டிஅணு குண்டுசரவெடிகள் ஓலைவெடி ராக்கெட் என்று      தரம்தரமாய்ப் பார்த்துவாங்கி அக்கம் பக்கம்பிறவீட்டுச் சிறுவரோடு சேர்ந்து நண்பர்     பெருங்கூட்ட மாகநல்ல மகிழ்ச்சி யோடுபரபரப்பாய் வெடிக்கின்ற தருணம் கேட்கும்      பட்டாசுச் சத்தம்தான் கொள்ளை கொள்ளும்.பட்டாசுத் தொழிற்சாலை விபத்தில் சிக்கி      பலியாகும் உயிர்க்கிங்கு வருத்தம் சொல்லபட்டாசு ஆலைமுத லாளி கட்கு      பரிவான வார்த்தையிங்கு வருவ தில்லைபட்டாசு ஆலைவிதி பார்த்துச் செய்ய      பதவியிலே இருப்பவர்க்கோ மனமு மில்லைபட்டாசுச் சத்தத்தின் பின்னால் வாடும்      பரிதாப உயிரவலம் முடிவ தென்று!        

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT