பள்ளிக் குழந்தைகள் வயதினில் நமக்கெலாம்
பரவசம் தன்னைத் தருவதெலாம் ,
பட்டாசு சத்தம்தான் என்பதே உண்மையாம்
பண்டிகை என்றாலே தீபாவளி !
விட்டிடும் வாணங்கள் உயரவே சென்றிட்டு
விண்ணைத் தொடுகின்ற போதினிலே ,
வியப்பும் மகிழ்வும் மனதினில் பொங்கிடும்
வேறெதில் நாமதைக் கண்டிடுவோம் ?
எட்டவே நில்லென தாய்தந்தை சொல்லியும்
யார்தான் அதுதன்னை மதித்திட்டோம் ,
இலட்சுமி வெடிதன்னை வெடித்திட்டுப் பிறர்முன்னம்
இறுமாப் படைந்ததை யார்மறப்பார் ?
கட்டுக் கட்டாகப் பட்டாசை வாங்கியக்
காலமொன றுண்டாம் , இன்றைக்கோ
கைக்குள் அடங்கிடும் அளவே வாங்கவும்
கண்டிப்பாய் இருநூறு வேண்டிடுதே !