கவிதைமணி

பட்டாசுச்சத்தம்: மீனா தேவராஜன்

கவிதைமணி

தீபாவளிக்குத் தீபாவளி தெருவெங்கும்
தீயொளியுடன் வெடிக்கும் பட்டாசு எங்கும்
வெடிக்கும் சத்தம் நிறைந்திருக்கும் எங்கும்
பொட்டு வெடியும் பட்டதும் சத்தம் எழுப்பிடுமே!

பட்டாசு வைக்கும்போது பட்டென வெடிப்பது
சட்டென மனம் பரவசம் அளிப்பது
வெடித்துச் சிதறி விழுபுண் தோன்றுவது
வேண்டாத வேதனையல்லவா பாலகரே!

சுதந்திரமாய் வாழும் சிட்டுக்குருவிகளை
சுற்றுச்சூழலைக் காக்கும் சின்னப்பறவைகளை
புல்லினங்களை விருத்திக்கும் புள்ளினங்களை
வெடிச்சத்தம் மிரட்டி அடிக்குதே பாலகரே!

அச்சத்தால் பூமிவிட்டு அழிகின்றனவே
மிச்சம் இருப்பது எச்சங்கூட இல்லையே!
காரியத்திற்குக் காசை ப் பயன்படுத்தலாம்
கரியாக்கும் பட்டாசுக்கேன் வீணாக்குவது, பாலகரே!

பிறக்கைபோதும் இறக்கும்போதும் வெடிகள் பலிவாங்குவது
சிறுவர் இறப்புக்கள், எப்போதும் வாடிக்கையாகி விட்டதே!
பட்டாசுப்பறைச் சத்தம் செவிப்பறையைச் செவிடாக்கும் சிட்டாய்ப் பறந்து வெடிப்பதுவும் வேண்டுமோ, பாலகரே?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT