கவிதைமணி

பட்டதாரி: அருள் .க.  இராபர்ட் 

கவிதைமணி

பள்ளிக்கூடம் சேக்கும்போது
அப்பனோடகனவு
துள்ளித்திரியும் வயதினிலே
துளிர்த்துவிட்ட கனவு

படிச்சபாடம் அத்தனையும்
பட்டம்தானே நினைவு
பலகலையும் படிக்கத்தானே
மனச்செடுத்தது தினவு

காலேஜுல சேக்கப்போற
காலம் வந்தநேரம்
காசுபாக்கும் படிப்பெதுன்னு
கண்டுபிடிக்கும் பாரம்

இன்ஜினியர் படிப்புமுடிச்சா
இங்கிலாந்துலே வேலே
இன்னும் கொஞ்சம் மேலேபடிச்சா
ஐரோப்பவுலே மாலே

அடுக்குசட்டி  அம்மா தாலி
அத்தனையும் வித்து
அடுத்தடுத்து படிக்கவைக்க
அப்பங்காரன் சொத்து

பட்டம்வாங்கி இரங்கிவந்தா
படிஞ்சது ஒரு வேல
எட்ட நின்னு பாக்காமே
எடுத்து வையி காலே

ஆந்தையைப்போல் ராத்திரியில்
முழிச்சிருக்கனும் சாமி
ஆளுங்கமொகம் பாக்காமே
அடங்குமே பகல்பூமி

ஆத்தா அப்பன் மூஞ்சிக்கூட  
மனசிலிருந்து போச்சு
பட்டதாரி ஆனபின்னால்
பலன் தான் என்ன ஆச்சு 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT