"வழி தவறிய பயணங்கள்: கே. நடராஜன்
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:12 AM
வழி தவறிய பயணம் நெறி தவறி தொடர்ந்தால் அது செல்லாத காசுக்கு சமம் !..சொல்லாமல் சொல்லும் அது உன் வாழ்க்கை ஒரு செல்லாத காசு என்று ...! பகிர்ந்து உண்ணும் பண்பும் நலிந்தோரிடம் அன்பு காட்டும் மனமும் இல்லாத ஒருவன் வாழ்க்கை பயணம் கரை சேர்க்காது அவனை ஒரு நாளும் ! நெறிமுறை எதுவும் இல்லாத வாழ்வும் கறை படிந்த கரங்கள் சேர்க்கும் பணமும் தரை தட்ட வைக்கும் அவன் வாழ்க்கை பயணக் கப்பலை !வாழ்க்கை பயணத்தில் கரை சேர வழி பல உண்டு ...ஒரு வழி தவறினாலும் நெறி பிறழாமல் ஒருவன் தொடரும் பயணம் சேர்க்கும் செல்வாக்கு அவன் வாழ்வுக்கு !