வழி தவறிய பயணம்: வ. மாரிசுப்பிரமணியன்
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:12 AM
மொழி தெரியாத ஊரில்,
விழிகள் இருந்தும் பலனில்லை
வழி தவறிய பயணத்தால்,
நேர் வழிகள் இருந்தும் பலனில்லை.
யாராகயிருந்தாலும் --- எந்த,
ஊராகயிருந்தாலும், நாம் போகும் வழி, சரியானால்,
சரியாது நம் இலக்கு..
தவறான வழிகள், நம்மை தடம் மாறவைத்து விடும்
தடுமாறவைத்து விடும், நிலை தடுமாறவைத்து விடும்,
நம்மை கவலைகள்,[பு] தைத்து விடும்,
சிந்திப்போம் செயல்படுவோம்,
வழி தவறாத பயணத்தையே, என்றும், எங்கும், இனி,
செயல்படுத்துவோம்….
Advertisement