கவிதைமணி

வழி தவறிய பயணங்கள் : ம. அஹமது நவ்ரோஸ் பேகம் 

கவிதைமணி

என் வழி தனி வழி என எவரும் 
தனியே பயணிக்க முடியாது.
தடைகளாலும், தடங்கல்களாலும் 
பயணங்கள் வழி தவறலாம்.

பயணிக்கும் வழியில் நேசக் கரம் 
நீட்டுவோர், அகம் அறிந்து நட்பு 
கொள்வதால் வழியெங்கும் வெளிச்சக் 
கீற்றுகள் வெள்ளமாய்ப் பாயலாம்.

பொய்யுரைத்து பொறாமை கொள்வோர், கொடியோர் 
நட்பால் வழி தவறும் பயணங்கள் கேடாய் முடியும்.

ஆன்றோர், சான்றோர் அறிவிற் சிறந்தோர் நட்பால் 
வழி தவறா பயணங்கள் நன்மைகளால் நிரம்பும்.
 

என் வழி தனி வழி இதில் என் பயணம் 
இனிதாய் முடியும் என்று மனிதன் நினைப்பதை 
இறைவன் விதித்தது மாற்றுவதால் வழி தவறிய 

பயணங்களால் வாழ்வின் திசையும் மாறிப் போகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனுக்கள்அளிப்பு

நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு

வெல்லும் தமிழ்ப் பெண்கள் வீடு வீடாக பிரசாரம்

அரசுப் பேருந்து மோதி முதியவா் பலி

சமுதாயக் கட்டடம் திறப்பு

SCROLL FOR NEXT