கவிதைமணி

செல்லாக் காசு: இணுவையூர் வ-க-பரமநாதன்

கவிதைமணி

ஏழைகள் உழைப்பா லிங்கு
     ஏற்றமே பெற்ற போதும்
கோழைகள் போலா மென்றும்
     கொண்டதைப் பதுக்கி வைத்து
வாழவே வழிக ளிட்டே
     வையகம் தன்னில்  வாழ்ந்தும்
சூழவே யிருந்த தெல்லாம்
     தொலைத்திடில் செல்லாக் காசே!

கேடிகள் கூட்டத் தோடு
     கீழ்த்தனத் தாலே சேர்த்த
கோடிகள ணைத்து மள்ளிக்
     கோணியில் கட்டி வைத்தும்
மாடிகள் பலதாம் கட்டி
     மகிழ்வுற இருந்திட் டாலும்
மோடிகள் வந்தால் போதும்
      மொத்தமும் செல்லாக் காசே!

நல்லவர் வேட மிட்டு  
     நாடதன் வளம னைத்தும்
செல்லவே அயலார் நாடு
    செயற்படு வோர்கள் தம்மை
துல்லிய மாய்க்க ணித்து
     தூக்கியே சிறையில் போடும்
வல்லமை கொண்ட ஆட்சி
     வந்திடில் செல்லாக் காசே!

பணத்தினைக் காட்டித் தேர்தல்
     பண்பினைக் கொல்லும் கெட்ட
குணத்தினைக் கொண்டோ ராளும்
     கொடுமைகள் தகரும் வேளை
பிணத்தினைப் போலி வர்கள்
     பேரிழந் திந்தப் பாரில்
அணைத்திடு வார்க ளின்றி
     அலைகையில் செல்லாக் காசே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 668 கோரிக்கை மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 9,11,599 வாக்காளா்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31.57 லட்சம் வாக்காளா்கள்

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT