கவிதைமணி

செல்லாக் காசு: கு.முருகேசன்

கவிதைமணி
ஓடி ஓடி உழைப்பவர் நடுவேஉட்கர்ந்தே உண்பவன் செல்லாக் காசு.தன்னை மாற்றிக்கொள்ளாமல்தேசம் விட்டு தேசம் போகும்எல்லாக் காசும் செல்லாக் காசு.மூச்சடக்கியே, நீ முத்தெடுத்தாலும்-உன்மூச்சு நின்ன, நீ செல்லாக் காசே!அடுக்குமாடி வீடிருந்தலும்அளவுக்கு மீறிய பணமிருந்தாலும்ஆபத்துக்கு உதவா எல்லாக் காசும்செல்லாக் காசே!சொத்து பாத்து இருந்தாலும்சொந்தம் பந்தம் இருந்தாலும்சோகம் தீர்க்க ஒரு தோழன்இல்லா வாழ்வும் செல்லாக் காசே!பாடுபட்டு பணத்தை கட்டிபசங்களையும் படிக்கவச்சா  பசங்க பண்போடு வளரலனாபட்ட பாடு எல்லாமேசெல்லாக் காசே!நேர்மையான அதிகாரிக்குநீட்டுகின்ற லஞ்சம் எல்லாம்செல்லாக் காசே!பணம் ஒத்துப் போனாலும்மனம் ஒத்துப் போகாததிருமணங்கள் எல்லாமேசெல்லாக் காசே!நம்பிக்கை இழந்த மனிதன் வாழ்வில்எல்லாக் காசும் செல்லாக் காசே!நம்பிக்கையுள்ள மனிதன் வாழ்வில்எங்கே? காட்டு பார்ப்போம்செல்லாக் காசை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 668 கோரிக்கை மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 9,11,599 வாக்காளா்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31.57 லட்சம் வாக்காளா்கள்

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT