கவிதைமணி

செல்லாக் காசு: பொன்.இராம்

கவிதைமணி

ஆறுவயதில் தாத்தா
பையில் எடுத்த
செல்லாக்காசுகளின்
உண்டியல் பழைய இரும்புக்கடையின்
அடைக்கலம்!

அறுபது வயது தாத்தாவின்
உழைப்பு அனைத்தும்
சுரண்டிய தலைமுறைகள்
தண்டூன்றிய காலத்தில்
செல்லாக்காசாக்கிய
இளந் தலைமுறையின்
அறிவற்ற செய்கையினால்
முதியோர் இல்லங்களின்
உதயம் ஆரம்பம்!

பரிதியின் வெளிச்ச
ரேகைகள் அல்ல இவைகள்!
வரப்போகும் செல்லாக்காசு
இளந்தலைமுறை வரலாற்றின்
சோக முடிவின்  முதல்
அத்தியாயம்!

இலஞ்சங்களின் வருகையால்
கருவூல மூட்டைகள்
நிரம்பிய வீடுகளில்
இன்று தூக்கம் தொலைந்து
நாள்கணக்கில் ஆகின்றன!

செல்லாக்காசு என
ஒதுக்கிய முதியோர்இல்ல
பெற்றோர் இன்று
வீட்டில் இருந்திருந்தால்
மூட்டைப் பணங்கள்
செல்லாக்காசாக மாறாது
இருந்திருக்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 668 கோரிக்கை மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 9,11,599 வாக்காளா்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31.57 லட்சம் வாக்காளா்கள்

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT