எழுத்து- கே. அசோகன்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:54 PM
“அம்மா” என்ற எழுத்தினிலேஅடங்கி இருக்குது பாசம்தானே!சும்மா என்ற எழுத்தினிலேசோம்பல் கிடக்குது நிசம்தானே!கம்மாக் கரையின் ஓரத்திலேகருத்தாய் இளைஞன் காத்திருக்கஅம்மான் மகளும் வந்தாளே!ஆசை முத்தமும் தந்தாளே!ஆசை முத்தத்தின் ஓசையிலே”இச்சென்ற” எழுத்தும் உள்ளனவேநேசம் என்ற எழுத்தினிலேநிறைவாய் மகிழுது மனதினிலே!தேசம் என்ற எழுத்தினிலேதேடி ஒற்றுமை சேர்த்திட்டால்ஓசை சத்தம் ஒளிந்திடுமேஓளிமயமாய் நாடு ஒளிர்ந்திடுமே!அளந்தே தந்தான் வள்ளுவனும்அதன்பேர் திருக்குறள் என்போம் !வளமிகு ஒண்ணேமுக்கால் அடியில்வாழ்வின் ஆதாரம் இருக்குதே!தளரா தமிழ்மொழியில் தானேதகைசால் கம்பனும் படைத்தானேஅளவாய் அழகாய் எழுத்தையேஅழகாய் புனைந்தான் கவிதையாய்!ஆ-வென்ற எழுத்தில் தான்பசுவென்ற உயிரின முண்டே!கோ-வென்ற எழுத்தில் தான்அரசன் என்பவன் ஆள்கின்றான்பூ-நக்கி என்ற எழுத்தில் தான்பூவில் அமரும் வண்டும் உண்டே!தீ-என்ற எழுத்தில் தான்உண்மை சுடுதல் ஆகுமன்றோ!