எழுத்து - ஆர்.தியாகு
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:54 PM
எழுத்துக்கள் மட்டும்
இல்லையென்றால்...
யோசித்தாலும்
திருவள்ளுவரை தெரிந்திருக்காது!
வரலாறு தெரியாமல்
சாதிகள் செத்திருக்கும்!
கையெழுத்திற்கு லஞ்சம்
பட்டாவிற்கு பணம்
சான்றிதழுக்கு தனி விலை இருக்காது!
Advertisement
காதல் கடிதங்கள்
மதத்திற்கு ஒரு புத்தகம்
பத்திரிக்கையின் பொய்கள்
என எதுவும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
கோவில் "டியூப் லைட்" வெளிச்சத்தை
எழுத்துக்கள் மறைத்திருக்காது
"ஆட்டோகிராப்" போடும் நேரங்களில்
கொஞ்சம் நம்மோடு பேசியிருப்பார்கள்!
பரீட்சையில் பிட்டுகள் ஒழிந்திருக்கும்
தபால்காரனுக்கு வேலை போயிருக்கும்
நம் கடவுள் எண்ணிக்கையிலும்
ஒன்று குறைந்திருக்கும்!
நீரின்றி மட்டுமல்ல
எழுத்தின்றியும் அமையாது உலகு!