நீதியைதேடி: சுந்தரம்சுப்ரமணியன்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:54 PM
கைதிகளை
காவுவாங்கும்
மரணகூடங்களாய்
சிறைகூடங்கள்!!
காதலிக்கமறுக்கும்
கன்னியருக்கோ
சாலைகள்கூட
வதைகூடங்கள்.
விலங்குகளுக்கு
உயிர்வாழ்தல், இனப்பெருக்கம்
மட்டுமேவிதி.
மனிதம்அற்ற
மாக்களுக்கோ
எவ்வழி ஆகிலும்
குவிக்கவேண்டும்
நிதி
காசுக்காகஅஞ்சாது
செய்வோமே
கொலை.
கற்பழிப்பு ,கொள்ளை
பலருக்குகைவந்த
கலை
Advertisement
இன்று
மெத்தப்படிக்க
வேண்டாம்.
மேனிநோக உழைக்க
வேண்டாம் - வெயிலில்
சுற்றித்திரிய
வேண்டாம்.
சுகமெதுவும்இழக்க
வேண்டாம்.
கத்தைபணமிருந்தால்
கடவுளையும்
வாங்கிடலாம்.
நீதிமட்டும்
விதிவிலக்கா?
நீங்களேசொல்லுங்கள்.
அந்தோபரிதாபம்!
அதிகாரம்
கொண்டோருக்கும்
ஆணவ
பணமுதலைகளுக்கும்
ஆசைநாயகியாய்
ஆகிப்போனாள்
நீதிதேவதைஎனும்
பேதை!
இதுபுரியாமல்
இன்னும்ஏழைகள்
நீதிதேடிஅலைவது
முடிவிலாநீண்டதொரு
பாதை!