முகப்பு
கவிதைமணி

நீதியைத் தேடி: ஆர்.அருண்குமார். 

Updated On : 3 அக்டோபர், 2016 at 4:02 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:54 PM

நிலையற்ற வாழ்வில் அமைதி பெற
நிம்மதியான எண்ணம் வேண்டும்.
கலையற்ற அழகு பொலிவாக
கணிவான மனம் வேண்டும்.

அலைபாயும் நினைவுகளை அடக்கிட
அமைதியான உள்ளம் வேண்டும்.
சிலை போல நெஞ்சமிருந்தால்
சிதைந்துவிடும் மனித நேயம்.

உலகத்தில் நிலையான வளம்தேட
உறுதிகொண்ட துணிவு வேண்டும்.
கலகத்தைக் கையிலெடுத்தால்
களையிழந்த நிலாவாகும் வாழ்வு.

நியாயம் கிடைக்க வேண்டுமெனில்
நிந்தை கலைந்தெழுந்திடுவீர்.
புயலாக பொங்கிடும் மனதை
பொலிவாக மாற்றிடுவீர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.