நீதியைத் தேடி: ஆர்.அருண்குமார்.
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:54 PM
நிலையற்ற வாழ்வில் அமைதி பெற
நிம்மதியான எண்ணம் வேண்டும்.
கலையற்ற அழகு பொலிவாக
கணிவான மனம் வேண்டும்.
அலைபாயும் நினைவுகளை அடக்கிட
அமைதியான உள்ளம் வேண்டும்.
சிலை போல நெஞ்சமிருந்தால்
சிதைந்துவிடும் மனித நேயம்.
உலகத்தில் நிலையான வளம்தேட
உறுதிகொண்ட துணிவு வேண்டும்.
கலகத்தைக் கையிலெடுத்தால்
களையிழந்த நிலாவாகும் வாழ்வு.
நியாயம் கிடைக்க வேண்டுமெனில்
நிந்தை கலைந்தெழுந்திடுவீர்.
புயலாக பொங்கிடும் மனதை
பொலிவாக மாற்றிடுவீர்.