கவிதைமணி

நீதியைதேடி: சுந்தரம்சுப்ரமணியன்

கவிதைமணி

கைதிகளை
காவுவாங்கும்
மரணகூடங்களாய்
சிறைகூடங்கள்!!

காதலிக்கமறுக்கும்
கன்னியருக்கோ
சாலைகள்கூட
வதைகூடங்கள்.

விலங்குகளுக்கு
உயிர்வாழ்தல், இனப்பெருக்கம்
மட்டுமேவிதி.
மனிதம்அற்ற
மாக்களுக்கோ
எவ்வழி ஆகிலும்
குவிக்கவேண்டும்
நிதி

காசுக்காகஅஞ்சாது
செய்வோமே
கொலை.
கற்பழிப்பு ,கொள்ளை
பலருக்குகைவந்த
கலை

இன்று
மெத்தப்படிக்க
வேண்டாம்.
மேனிநோக உழைக்க
வேண்டாம் - வெயிலில்
சுற்றித்திரிய
வேண்டாம்.

சுகமெதுவும்இழக்க
வேண்டாம்.
கத்தைபணமிருந்தால்
கடவுளையும்
வாங்கிடலாம்.
நீதிமட்டும்
விதிவிலக்கா?
நீங்களேசொல்லுங்கள்.

அந்தோபரிதாபம்!
அதிகாரம்
கொண்டோருக்கும்
ஆணவ
பணமுதலைகளுக்கும்
ஆசைநாயகியாய்
ஆகிப்போனாள்
நீதிதேவதைஎனும்
பேதை!

இதுபுரியாமல்
இன்னும்ஏழைகள்
நீதிதேடிஅலைவது
முடிவிலாநீண்டதொரு
பாதை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT