கவிதைமணி

நீதியைத் தேடி: - கோ. மன்றவாணன்

கவிதைமணி

மாணவர்களிடம் பணம்வாங்கிக்கொண்டு
பாஸ் போடுகிறார்
ஆசிரியர்

கள்வனை விட்டுவிட்டு
பறிகொடுத்தவனைக் கைது செய்கிறது
காவல் துறை

அரசுக் கோப்புகளை நகர்த்தும் சக்தி
குறுக்கு வழியில் பணம்குவித்த
குபேரர்களுக்குத்தான் உண்டு

கல்வியும் மருத்துவமும்
ஏழைகளுக்கு எட்டாத
சந்திர சூரியர்கள்

நித்தமும்
நீதியைத் தேடி
நீதிமன்றம் செல்கிறேன்

அங்கே
ஓங்கி உயர்ந்து
உலகளந்து நிற்கிறது
அநீதியின் தரிசனம்

தொண்டு செய்யும் நல்லவர்நோ
யில் நொடிந்து
பாயில் நைந்து
வறுமையில் வதங்குகிறார்

மாபாதகங்கள் செய்தும்
மகிழுந்தில்
மகாராஜாக்களாக வருகிறார்கள்
பொல்லாதவர்கள்
அவர்களைக் கைகூப்பித் தொழுகிறது
உலகம்

நல்லது செய்வோர்க்கு நல்லது நடக்கவும்
கெட்டது செய்வோர்க்குக் கெட்டது நடக்கவும்
வேண்டி முறையிட்டேன்
கடவுள் நீதிமன்றத்தில்

நேற்றே
அவர் கோவிலிருந்து
அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்டதாக
இன்று
பத்திரிகைகளில் பரபரப்புச் செய்தி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT