முகப்பு
கவிதைமணி

பொம்மைகள்: சசி எழில்மணி

Updated On : 10 அக்டோபர், 2016 at 2:51 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:57 PM
சின்னஞ்சிறு வயதுகளில்​செவ்வான பந்தலின் கீழ்கவலைகள் ஏதுமின்றிதுள்ளித்திரிந்த காலமதுகையளவு பொம்மைக்கும்உடை தந்த நேரமதுபாலூட்டி சோறுட்டிசீராட்டி தாலாட்டிஅன்னையாய் தந்தையாய்ஆனதொரு காலமுண்டுகண்சிமிட்டும் பொம்மையிடம்பழகிய நாட்கள் பல உண்டுகண்ணன்றும் மணியென்றும்கொஞ்சிய நாட்கள் இங்குண்டுபுதிதாய் ஒன்று கையில் கிடைத்திடபழையதை தூக்கி எறிந்ததுமுண்டுசலிப்புகள் உண்டாகபுதியதை நாடிச் சென்றதுமுண்டுவேடம் போடுமுலகமதில்நாமும் இருக்கின்றோம்குழந்தைகள் கையில் பொம்மைகளாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.